Ad Widget

யாழ்.பெரியபுலம் மகாவித்தியாலயத்திற்கு விசமிகள் தீ வைப்பு

யாழ்ப்பாணம் பெரியபுலம் மகாவித்தியாலயத்தின் சாரணர் கூடம் உள்ளிட்ட இரண்டு கூடங்கள் இனந்தெரியாத நபர்களினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் நேற்று இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியின் கொக்குவில் பகுதியில் உள்ள பெரியபுலம் பாடசாலையின் சாரணர் கட்டிடத்தொகுதிக்கு இனம் தெரியாதோர் வைத்த தீயினால் சாரணர் கூடம் மற்றும் அருகிலிருந்த மாணவர்களிற்கான சமையற்கூடம் ஆகியன முற்றாக எரிந்து தீக்கிரையாகியுள்ளது.

இதனையடுத்து யாழ்ப்பாணம் மாநகர சபையின் தீ அணைப்பு பிரிவினரால் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

தீ விபத்து இடம்பெற்ற பாடசாலையை யாழ் வலய கல்வி பணிப்பாளர் தெய்வேந்திரம் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். தீ விபத்து தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts