Ad Widget

யாழ்.பிரதேச செயலக பிரிவில் மேலும் 245 புதிய விண்ணப்பங்கள் ஆணைக்குழுவிடம் கையளிப்பு

missing-people-1யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள பகுதிகளில் இருந்து காணாமல் போனவர்கள் தொடர்பில் 245 புதிய விண்ணப்பங்கள் இன்று கிடைக்கப் பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி ஜனாதிபதி ஆணைக்குழுவினால் காணாமல் போனவர் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாட்சியப்பதிவுகள் யாழ்.மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.

அதன்படி 4 கிராமசேவகர் பிரிவில் இருந்து 67பேர் அழைக்கப்பட்டிருந்த வேளை மேலும் காணாமல் போனதாக 245 பேர் புதிய விண்ணப்பங்களை நேற்று ஆணைக்குழுவிடம் கையளித்துள்ளனர்.

எனினும் இவர்களுக்கான விசாரணைகள் விரைவில் நடாத்தப்படும் என்றும் ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கோப்பாய் பிரதேச செயலகத்தில் மேற்கொள்ளப்பட்ட சாட்சியப்பதிவுகளில் 49 பேர் சாட்சியம் அளித்ததுடன் 93 பேர் புதிதாகவும் விண்ணங்களை ஆணைக்குழுவிடம் கையளித்துள்ளனர்.

மேலும் நேற்று சாவகச்சேரி பிரதேச செயலகர் பிரிவில் 59 பேர் அழைக்கப்பட்டு அவர்களில் 44 பேர் சாட்சியம் அளித்ததுடன் 170பேர் புதிய விண்ணப்பங்களையும் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts