யாழ்.பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த மாணவர்களில் ஒன்பது பேர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
விடுதியில் தங்கியிருந்து கல்விப்பயிலும் சட்டப்பீடத்தை சேர்ந்த மாணவர்களே உணவு ஒவ்வாமையையடுத்து இவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விடுமுறையில் வீட்டுகளுக்கு சென்ற மாணவர்கள் வீட்டிலிருந்து எடுத்துவந்த உணவுகளை உட்கொண்டதையடுத்தே இவ்வாறு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.