உயர்க்கல்வி அமைச்சினால், யாழ்ப்பாண பல்கலைக்கழகம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. இப்பல்கலைக்கழகத்தின் விவசாய மற்றும் பொறியியல் ஆகிய இரு பீடங்களும் கிளிநொச்சியில் ஸ்தாபிக்கப்படவுள்ளன என்று அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், குறிப்பிட்ட சில வசதிகளுடன் மாத்திரம் இயங்கி வந்த யாழ். பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தையும் சகல வசதிகளுடன் கிளிநொச்சியில் அமைக்கவுள்ளதாக அவ்வமைச்சு குறிப்பிட்டுள்ளது.