யாழ்.பல்கலைக்கழகத்தில் நேற்று முதலாவது பேரவைக் கூட்டம் ஆரம்பமான நிலையில் பதிவாளர் அலுவலகத்தின் முன்பாக இனந்தெரியாதவர்களால் மலர் வளையம் வைக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு என்று எழுதப்பட்ட வாசகமும் அதில் பொறிக்கப்பட்டுள்ளது.
அதனை யார் வைத்தார்கள் என்பது அங்கள்ள எவருக்கும் தெரியாதுள்ளது.
பல்கலைக்கழக பேரவை உறுப்பினர்கள் புதிதாக தெரிவு செய்யப்பட்ட பின்னர் முதல் கூட்டம் நேற்று இடம்பெற்றது. இதன் போதே பதிவாளர் அலுவலகத்தின் முன்பாக குறித்த மலர் வலையம் வைக்கப்பட்டுள்ளது.