Ad Widget

யாழ்.பல்கலையில் டெங்கு , விடுதிகள் மூடல் , விரிவுரைகள் இடைநிறுத்தம்

டெங்குத் தாக்கத்தினால் யாழ். பல்கலைக்கழக விரிவுரைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் விடுதியில் இருந்து மாணவர்களும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

யாழ். பல்கலைக்கழக பெண்கள் விடுதியில் தங்கியிருந்த கலைப்பீட மாணவிகள் 12 பேர் காய்ச்சலினால் கடந்த வாரம் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 6 பேருக்கு டெங்குக் காச்சல் என இனங்காணப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஏனைய மாணவிகளுக்கும் இந்த காய்ச்சல் பரவும் அபாயம் இருப்பதாக சுகாதாரப் பிரிவினால் அறிவிக்கப்பட்டதை அடுத்து பெண்கள் விடுதி மூடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கலைப்பீட முதலாம் மற்றும் இறுதி ஆண்டு மாணவா்களுக்கான விரிவுரைகள் நாளை முதல் மறு அறிவித்தல் வரும் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Posts