யாழ் பல்கலைக்கழகத்தின் 29 வது பட்டமளிப்பு விழா நேற்று காலை 9.00 மணிக்கு துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் தலைமையில் கைலாசபதி கலையரங்கில் இடம்பெற்றது.
இந் நிகழ்வுக்கு அதிதியாக பல்கலைக்கழக வேந்தர் எம் சிவசூரிய கலந்துகொண்டதுடன் தமிழரின் பாரம்பரிய முறைப்படி தவில், நாதஸ்வர மங்கள வாத்தியங்களுடன் விருந்தினர்கள் அழைத்துவரப்பட்டனர்.
இப் பட்டமளிப்பு விழா நாள் ஒன்றுக்கு 4 அமர்வுப்படி இரண்டு நாட்களுக்கும் 8 அமர்வுகளாக நடைபெறவுள்ள நிலையில் நேற்றய அமர்வு இனிதே நிறைவடைந்தது.
இதில் 1673 பேருக்கு பட்டமளிக்கப்படவுள்ளதுடன் இதில் பட்டத்தின் பின் படிப்பு 210 பேருக்கும் ஆசிரியர்களுக்கான பட்டத்தின் பின்னரான டிப்ளோமா 141 பேருக்கும், பட்டப்படிப்பு 911 பேருக்கும், வவுனியா வளாகத்தில் 121 பேருக்கும், டிப்ளோமா 65 பேருக்கும், வெளிவாரியாக 222 பேருக்கும் பட்டம் வழக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.