Ad Widget

யாழ் பல்கலைக்கழகத்தில் மரநடுகை திட்டம் ஆரம்பிப்பு

யாழ்.பல்கலைக்கழக தாவரவியல்துறையும் கொழும்பு பல்கலைக்கழக தாவரவியல்த்துறையும் இணைந்து ஆரம்பித்துள்ள மரநடுகைத்திட்டம், நேற்று வெள்ளிக்கிழமை (17), யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.

இயற்கையின் காலநிலை மாற்றம் வெகுவாக தற்போது மாற்றமடைந்து வருகின்ற நிலையில், அதனை சமப்படுத்தும் நோக்கிலும் இயற்கைக்கும் மாணவர்களுக்கம் இடையில் ஓர் உறவு முறையை பேணும் வகையிலும் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 1,000 மரக்கன்றுகள் யாழ் மாவட்டத்தில் நாட்டப்படுகின்றன. நேற்றயதினம் யாழ் மாவட்டத்திலுள்ள வடமராட்சி, தீவகம், காங்கேசன்துறை வீதி ஆகிய மூன்று பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட 9 பாடசாலைகளில், பல்கலைக்கழக மாணவர்கள் குழுக்களாக பிரிந்து இத்திட்டத்தை செயற்படுத்தினர்.

இதன்முதல் கட்டமாக யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் விருந்தினர்களால் மரநடுகை நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வு பிரதம விருந்தினராக யாழ்.பல்கலைக்கழக பதில் துணை வேந்தர் பேராசிரியர் ஜி.மிகுந்தனும் விஞ்ஞான பீடாதிபதி பேராசிரியர் ஆர்.விக்னேஸ்வரனும் கலந்து கொண்டனர்.

மேலும், கொழும்பு பல்கலைக்கழக தாவரவியல் துறை பேராசிரியர் டபிள்யூ.பி.யாபா, யாழ். பல்கலைக்கழக தாவரவியல்துறை தலைமை பேராசிரியர் கலாநிதி திருமதி ஆர்.யஞானேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related Posts