யாழ். நகர அபிவிருத்திக்காக மத்திய அரசின் உதவிகளை பெற்றுக்கொடுக்கத் தயாராக இருப்பதாகவும், தேவையேற்படின் அதற்கான கோரிக்கையை முன்வைக்குமாறும் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
யாழ். மாநகர மேயர் இம்மானுவேல் ஆனோல்ட்டை, யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் செயலகத்தில் இன்று (புதன்கிழமை) முற்பகல் இச்சந்திப்பு கலந்துரையாடியபோதே ஆளுநர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது யாழ். நகரத்தை அழகுபடுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் மற்றும் பணிகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. அதன் பிரகாரம், தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக உள்ளதாகவும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மாகாண ஆளுநராக இரண்டாவது தடவையாகவும் நியமிக்கப்பட்ட ரெஜினோல்ட் குரே, நேற்று தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.