Ad Widget

யாழ்.நகரில் விபத்து- ஒருவர் பலி

யாழ். நகரில் மிட்டாஸ் கடைச் சந்திக்கு அருகில் இன்று பிற்பகல் 1.45 மணியளவில் முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளை பின்னால் அதிவேகத்தில் வந்த டிப்பர் வாகனம் பந்தாடியதில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் தலைசிதறி சம்பவ இடத்திலே சாவடைந்தார்.

உயிரிழந்தவரின் சடலம் யாழ்.போதனா வைத்தியச்சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் வைத்தியர் என தெரியவருகிறது. உயிரிழந்தவர் யாழ்.போதனாவைத்தியசாலை மருத்துவரான கோபிநாத் (வயது-30)எனத் தெரியவருகிறது.

இவர் உரும்பிராயைத் சேர்ந்தவர் எனவும் மூன்று மாதங்களுக்கு முன்னரே திருமணம் ஆனவர் எனவும் கூறப்படுகிறது.

இதேவேளை மோதித் தள்ளிய டிப்பர் சாரதி தலைமறைவாகியுள்ள நிலையில் பொலிஸார் அவரை தேடிவருகின்றனர்.

Related Posts