Ad Widget

யாழ் நகரில் சுகாதார சீர்கேடு

யாழ் மாநகரசபை தொழிலாளர்கள் கடந்த ஐந்து நாட்களாக வேலை நிறுத்தத்தினை மேற்கொண்டு வருவதால் தற்போது யாழ் நகரில் சுகாதார சீர்கேடுகள் நிலவுகின்றது.

jaffna

குறிப்பாக யாழ் நகரப் பகுதியில் உள்ள உணவகங்களின் கழிவுகள், துர்நாற்றம் வீசும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

அத்துடன் அங்காடி வியாபாரிகளின் கழிவுப் பொருட்கள், ஏனைய கடைகளின் கழிவுப் பொருட்கள் அங்காங்கே தேங்கி காணப்படுகின்றன.

எனவே பொதுமக்களின் நலன் கருதி உடனடியாக உணவகங்களை மூட உரிமையாளர்கள் நேற்று (11) யாழ் வணிகர் கழக நிர்வாக சபையுடனான கூட்டத்தின் போது தீர்மானித்துள்ளனர்.

இது தவிர பொறுப்புக் கூற வேண்டியவர்கள் இதுவரை எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாது மௌனமாக இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் பொறுப்புக்களை உணர்ந்து உரிய சுகாதார தொழிலாளர்களுடன் உடனடி பேச்சுவார்த்தையொன்றை மேற்கொண்டு நிலைமையை சீர்செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Posts