Ad Widget

யாழ் கோட்டை வளாகத்தில் இலங்கை பொலிஸின் 150 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு

இலங்கை பொலிஸின் 150 ஆவது ஆண்டு நிறைவுக்கான வட மாகாண வைபவம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் கோட்டை வளாகத்தில் நடைபெறவுள்ளது.

400 பொலிஸ் மற்றும் விசேட செயலணி படையினர் மற்றும் 300 பாடசாலை கெடட் மாணவ பயிலுநரின் அணிவகுப்பும் அங்கு இடம்பெறவுள்ளது.

இதனை முன்னிட்டு பொலிஸ் கலாசார நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.

பொதுமக்கள் இதனை பார்வையிட முடியும்.

திறமையாக செயற்பட்ட வடக்கு பொலிஸ் அதிகாரிகளுக்கு பரிசில்களும், சான்றிதழ்களும் இதன்போது வழங்கப்படவுள்ளன. பாடசாலை மட்டத்தில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கும் பரிசில்களும் சான்றிதழ்களும் இதன்போது வழங்கப்படவுள்ளன.

Related Posts