Ad Widget

யாழ். கைதடி சாந்திநிலையத்திற்கு இராணுவ மகளிர் படையணி விஜயம்

யாழ்ப்பாணம் கைதடிப் பிரதேசத்திலுள்ள வயோதிப மடமான சாந்தி நிலையத்திற்கு யாழ்ப்பாணப் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 7ஆவது இராணுவ மகளிர் படையணியினர் தமது விஜயத்தை மேற்கொண்டனர்.

படையணியின் கட்டளைத் தளபதியான மேஜர் கீதிக்கா ரண்கொடகே தலைமையில் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் வயோதிப மடத்திலுள்ளவர்களுடன் கலந்துரையாடி உணவு மற்றும் குளிர் பாணங்கள் மகளிர் படையினரால் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் மகளிர்ப் படையணியின் இராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் படையினர் கலந்து கொண்டனர்.

Related Posts