யாழ் எய்டினால் வேலனை பிரதேச செயலரின் வேண்டு கோளுக்கு இணங்க புங்குடுதீவு பிரதேச நலிவுற்ற மாணவர்களுக்கு கற்றல் மேம்பாட்டிற்கான பல்வேறான உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டன.
வேலனை பிரதேச செயலக கணக்காளர் திரு.ப.கஜேந்திரன் தலைமையில் புங்குடுதீவுசுப்பிரமணிய மகளிர் கல்லுாரியில் இடம் பெற்ற நிழ்வில் பிரதம விருந்தினராக பிரபல பொருளியல் ஆசிரியரும் யாழ் எய்ட் ஆலோசகருமான திரு.சி.வரதராஜன் கலந்து சிறப்பித்தார்.
அத்துடன் இன் நிகழ்வில் யாழ் எய்ட் பணிப்பாளர், கிராம அலுவலர்கள், சிறுவர் மேம்பாட்டு உத்தியோகஸ்தர்கள் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள்,பாடசாலை அதிபர்,ஆசிரியர்கள்,பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.