Ad Widget

யாழ். இளைஞன், இறம்பொடையில் மரணம்

யாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கைச்சேர்ந்த 24 வயதான நாகராசா விஜலேந்திரன் என்ற இளைஞன் நுவரெலியா மாவட்டத்திலுள்ள கொத்மலை, இறம்பொடை நீர்வீழ்ச்சியில் மூழ்கி மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை காலை 11.10க்கு இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலுள்ள சிலருடன் இறம்பொடைக்கு சுற்றுலா வந்திருந்த நிலையிலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

அவருடைய சடலம், கொத்மலை ஆதார வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Related Posts