யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு அருகில் நேற்றுமாலை ஒருவர் வாள்வெட்டுக்கு இலக்காகி யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
‘‘இந்துக் கல்லூரி சுற்றுவட்டத்தில் எனது வாகனத்திலிருந்து இறங்கி அருகிலுள்ள கடைக்குச் சென்ற போது மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் வாளால் வெட்டினர்’’ என்று காயமடைந்த உரும்பிராயைச் சேர்ந்தவ ஜோன் ஜான்சன் (வயது 34) தெரிவித்தார்.
அவர்கள் வீதியில் வாளை வீசிக்கொண்டு பயணித்தனர் என்றும் அப்போதே அவருக்கு வெட்டுக் காயம் ஏற்பட்டுள்ளது எனவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.