Ad Widget

யாழ். இந்துக் கல்லூரிக்கு அருகாமையில் விபத்து, ஒருவர் பலி

accidentயாழ். இந்துக் கல்லூரிக்கு அருகாமையில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இணுவில் மேற்கு, இணுவில் பகுதியைச் சேர்ந்த இராசேந்திரம் திருகரன் (வயது 37) என்பவரே உயிரிழந்துள்ளார்.

இவர் பயணித்த மோட்டார் சைக்கில் வேகக்கட்டுபாட்டடை இழந்து மதிலுடன் மோதியதில் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இவ்விபத்து தொடர்பாக யாழ். போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts