யாழ்ப்பாணக் கல்வி வலயத்தின் ஆசிரிய மாநாடு, வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை மண்டபத்தில் யாழ்ப்பாணம் வலயக் கல்விப் பணிப்பாளர் நடராஜா தெய்வேந்திரராஜா தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை (06) நடைபெற்றது.
இன்றும் நாளை சனிக்கிழமையும் நடைபெறவுள்ள இந்த ஆசிரிய மாநாட்டில் கல்விக் கண்காட்சியும் இடம்பெறுகின்றது. வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு மாநாட்டை ஆரம்பித்து வைத்தார்.
ஆசிரியர்களின் ஆய்வுரைகள் சமர்ப்பித்தல், விவாத அரங்கு, இசைநிகழ்வு, முன்பள்ளி ஆசிரியர்களின் நிகழ்வு, நடனம், ஆரம்பக்கல்வி ஆசிரியர்களின் நிகழ்வு, நாடக ஆற்றுகை ஆகியனவும் இந்த மாநாட்டில் நடைபெறன.