Ad Widget

யாழ்ப்பாணம் வருகிறார் ஜனாதிபதி! வலி. வடக்கில் காணிகளை விடுவிப்பார்!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வரும் 18 ஆம் திகதி யாழ்ப்பாணம் வருகிறார். இதன்போது காங்கேசன்துறை நடேஸ்வரக் கல்லூரியில் இருந்து ‘தல்சவன’ ஹோட்டல் வரையான சுமார் 400 ஏக்கர் காணிகள் உரிமையாளர்களிடம் கையளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்போது இந்திய அரசாங்கத்தால் புனரமைக்கப்பட்ட துரையப்பா பொது விளையாட்டரங்கை அவர் கையளிப்பார் எனத் தெரிகிறது. மேலும் அன்று சர்வதேச யோகா தினம் என்பதால் யோகா சிறப்பு நிகழ்வுகளிலும் அவர் பங்கேற்பார் எனக் கூறப்படுகின்றது.

Related Posts