Ad Widget

யாழ்ப்பாணத்தில் குப்பைக்கு மூட்டிய தீ உடலில் பற்றியதால் பெண் பலி

யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் குப்பைக்கு மூட்டிய தீ உடலில் பற்றியதால் இளம்குடும்ப பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.



இந்தசம்பவத்தில் பிரபாகரன் அனிஸ்ரா (23 வயது) எனும் குடும்பபெண்ணே உயிரிழந்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை குறித்த பெண் வீட்டு வளவினை துப்பரவு செய்து அவற்றுக்கு தீ மூட்டியிருந்தார்.


இந்தநிலையில் மண்ணெண்ணையை போத்தலை மூடி திறந்த நிலையில் அருகில் இருந்த தண்ணீர் தாங்கியின் மேல் வைத்துள்ளார்.

இதன்போது வீசிய கடும் காற்றினால் திறந்திருந்த மண்ணெணையை போத்தல் அப்பெண்ணின் உடலில் மீது ஊற்றியுள்ளது. இதனை தொடர்ந்து பெண்ணின் மீது தீ பற்றியுள்ளது.

படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் உடனடியாக தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அணுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.



இருந்த போதிலும் சிகிச்சை பலனின்றி குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.

Related Posts