Ad Widget

யாழ்ப்பாணத்திலிருந்து தியத்தலாவை நோக்கி பயணித்த பஸ் விபத்து: 24 பேர் காயம்

accidentயாழ்ப்பாணத்திலிருந்து தியத்தலாவை நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் 24 பேர் காயமடைந்துள்ளனர்.

கொத்தமலை, ரம்பொடை பிரதேசத்திலுள்ள செங்குத்துச் சரிவு ஒன்றில் பஸ் கவிழ்ந்து விழுந்ததில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (அதிகாலை 4.30 மணியளவில் இந்த பஸ் 60 அடி ஆழமான பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்த 21 பேர் கொத்மலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதேவேளை மூவர் வகுஹபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொத்மலை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Related Posts