Ad Widget

யாழில் 4 ஆவது தடவையாக இந்திய குடியரசு தின கொண்டாட்டம்

இந்தியாவின் 65ஆவது குடியரசு தின நிகழ்வுகள் இன்று காலை 9 மணிக்கு யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய துணைத்தூரகத்தில் கொண்டாடப்பட்டது.

india-flag

துணைத்தூதரகத்தின் உதவி உயர்ஸ்தானிகர் மகாலிங்கம் சம்பிரதாய பூர்வமாக இந்திய தேசியக் கொடியினை ஏற்றி வைத்து நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து இந்திய தேசியக் கீதம் இசைக்கப்பட்டதுடன் இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கின் குடியரசு தின வாழ்த்து செய்தி உதவி உயர்ஸ்தானிகர் மகாலிங்கம் அவர்களினால் வாசிக்கப்பட்டது. இதேவேளை, உதவி உயர்ஸ்தானிகர் மகாலிங்கம் அவர்களின் உரையும் இடம்பெற்றது.

மேலும் யாழ்ப்பாணத்தில் இந்திய துணைத்தூதரகம் ஆரம்பிக்கப்பட்டு 4ஆவது தடவையாக 2014 ஆண்டு இந்திய குடியரசு தினம் இன்று கொண்டாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts