Ad Widget

யாழில் 03 புதிய வைத்தியசாலைகள் திறப்பு

Hospital_Logoயாழ். மாவட்டத்தின் குரும்பசிட்டி, தெல்லிப்பழை, கொடிகாமம் ஆகிய பிரதேசங்களில் புதிதாக அமைக்கப்பட்ட 03 வைத்தியசாலைகளை வடமாகாண சுகாதார அமைச்சர் பத்மநாதன் சத்தியலிங்கம் அவர்கள் சனிக்கிழமை (15) திறந்து வைத்தார்.

குரும்பசிட்டியில் ஆங்கில வைத்தியசாலையும் தெல்லிப்பழை மற்றும் கொடிகாமம் பிரதேசங்களில் கிராமிய ஆயுர்வேத வைத்தியசாலைகளும் திறந்துவைக்கப்பட்டன.

இந்நிகழ்வுகளில் வடமாகாண சுகாதார அமைச்சர் பத்மநாதன் சத்தியலிங்கம், சாவகச்சேரி பிரதேச சபை தவிசாளர் சி.துரைராசா, வடமாகாண சுகாதார சுதேச வைத்தியதுறையின் செயலாளர் இ.இரவிந்திரன், வடமாகாண சுதேச வைத்தியத்துறை ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி சி.துரைரட்ணம், வடமாகாண சபை உறுப்பினர்களான கேசவன் சயந்தன், க.சர்வேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related Posts