Ad Widget

யாழில் வேலையில்லாப் பிரச்சினை இரண்டுமடங்காக அதிகரிப்பு!

யாழ்ப்பண மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் வேலையில்லாப் பிரச்சினை இரண்டு மடங்காய் உயர்ந்துள்ளது.

புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட தரவுகளின்படியே இந்த தகவல் கண்டறியப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டில் 5.7 சத வீதமாக இருந்த யாழ்ப்பாணத்தின் வேலையில்லாப் பிரச்சினை 2016 ஆம் ஆண்டு 7 சதவீதமாக அதிகரித்திருந்தது.

கடந்த 2 ஆண்டுகளில் யாழ்ப்பாணத்தின் வேலையில்லாப் பிரச்சினை 10.7 சத வீதமாக உயர்ந்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 2016 ஆம் ஆண்டில் 3.7 சதவீதமாக இருந்த முல்லைத்தீவு மாவட்டத்தின் வேலையில்லாப் பிரச்சினை, 2017 ஆம் ஆண்டில் 4.8 சதவீதமாக அதிகரித்துள்ளது.

Related Posts