Ad Widget

யாழில் வெவ்வேறு விபத்துச் சம்பவங்களில் இருவர் பலி!!

யாழ்ப்பாணத்தில் தொடருந்துடன் மோதுண்டு இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொக்குவில் ரயில் கடவையில் இன்று இந்தச் விபத்துச் சம்பவம் இடம்பெற்றது.

ராஜ்குமார் ஜெயந்தினி (வயது 23) என்ற இளம் பெண்ணே உயிரிழந்துள்ளார்.

கொக்குவில் தொழிநுட்ப கல்லூரிக்கு முன்பாக உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையை துவிச்சக்கர வண்டியை கடக்க முற்பட்ட போதே இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டது

இதேவேளை நெல்லியடியில் ஹன்டர் வாகனமும் மோட்டார் சைகிளும் மோதுண்டு ஏற்பட்ட விபத்தில் இளைஞர் ஒருவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரிக்கு முன்பாக இன்று பிற்பகல் 12.55 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது.

சம்பவத்தில் துன்னாலை கோவில் சந்தை பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞனே உயிரிழந்தார்.

ஹன்டர் வாகனம் வீதியில் பயணித்த வேளை, எதிரே மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன், தனது கட்டுப்பாட்டையிழந்து வீதியின் மறுபக்கத்தில் பயணித்த வாகனத்துடன் மோதி விபத்து ஏற்பட்டதாக ஆரம்ப விசாரணைகளில் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Posts