Ad Widget

யாழில் வீதி அகலிப்பு பணிகளுக்காக மின் விநியோகம் தடை

யாழில் வீதி அகலிப்பு பணிகளுக்காக உயர்அழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடமாற்றம் செய்யவேண்டியிருப்பதால் சில பிரதேசங்களில் மின் விநியோகம் தடைப்படும் என இலங்கை மின்சார சபையின் யாழ். பிராந்திய நிலையம் அறிவித்துள்ளது.16ஆம் திகதி திங்கட்கிழமை, 18 – புதன் கிழமை, 20 – வெள்ளிக்கிழமை மற்றும் 22 – ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில் காலை 8.30 மணியிலிருந்து மாலை 5.00 மணிவரை கரந்தன், நீர்வேலி, சிறுப்பிட்டி, கோப்பாய், இருபாலை, முடமாவடிப்பகுதி, பாற்பண்ணைப்பகுதி, திருநெல்வேலி நகரம், மருத்துவபீடப்பிரதேசம், ஆடியபாதம் வீதி கொக்குவில் சந்தி வரையான பிரதேசம், கல்வியங்காடு, நல்லூர், அரியாலை, தென்மராட்சிப் பிரதேசம் ஆகிய இடங்களிலும்

17 – செவ்வாய்க்;கிழமை, 19 – வியாழக்கிழமை மற்றும் 21 – சனிக்கிழமை ஆகிய தினங்களில் காலை 8.30 மணியிலிருந்து மாலை 5.00 மணிவரை சுன்னாகம், குப்பிளான், மயிலங்காடு, காங்கேசன்துறை உயர்பாதுகாப்பு வலயப்பகுதி, மல்லாகம், ஏழாலை, தெல்லிப்பளை, அளவெட்டி, பன்னாலை, சிறுவிளான், உரும்பிராய், ஊரெழு பிரதேசத்தின் ஒருபகுதி, கோண்டாவில் டிப்போ அண்டிய பிரதேசம் ஆகிய இடங்களிலும் மின் விநியோகம் தடைப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts