பொன்னாலையில் மூன்று வயதுக் குழந்தைக்கு காயத்தில் மிளகாய்த்தூள் பூசி சித்திரவதை செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த குழந்தையின் தந்தை இரண்டு திருமணமானவர். அவரது இரண்டாவது மனைவியின் குழந்தைக்கே இவ்வாறு சித்திரவதை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த குழந்தையின் தந்தையும், தாயும் தொடர்ச்சியாக கொடூரமான தாக்குதலை மேற்கொண்டு வந்துள்ளனர். இதனால் குழந்தையின் உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் காயங்கள் மீது மிளகாய் தூள் இட்டதாகவும், மிளகாயை உண்ண கொடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து சங்கானை பிரதேச செயலகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், பிரதேச செயலக அதிகாரிகள் வட்டுக்கோட்டை பொலிஸாரின் கவனத்திற்கு இந்த விடயத்தை கொண்டு சென்றனர்.
அந்தவகையில், கிராமசேவகர் மற்றும் பிரதேச செயலக சிறுவர்கள் தொடர்பான உத்தியோகத்தர்கள் குறித்த வீட்டிற்கு சென்ற நிலையில் அவர்கள் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
குழந்தையை மீட்பதுடன், அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸாருடன் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.