யாழ்ப்பாணத்தில் மின்சாரம் தாக்கி இராணுவ சிப்பாய் ஒருவர் சம்பவ இடத்திலேயே நேற்று (18) உயிரிழந்துள்ளார்.
மாத்தளை பகுதியைச் சேர்ந்த பண்டார (வயது 26) என்பவரே இவ்வாறு பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
பருத்தித்துறை – கற்கோவளம் பகுதியில் உள்ள இராணுவ முகாமில் மின் உபகரணம் ஒன்றினை திருத்திக் கொண்டிருந்த போதே இவரை மின்சாரம் தாக்கியுள்ளது.
சடலம் பருத்தித்துறை ஆதார சைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.