Ad Widget

யாழில் மாணவிகள் இருவரை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஆசிரியர் கைது!

jail-arrest-crimeயாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவிகள் இருவரை துஸ்பிரயோகத்திறக்கு உட்படுத்தியமை தெடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர் பதிவு செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் கந்தர்மடத்தில் வசிக்கும் 36 வயதுடைய ஆசிரியரை பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

குறித்த ஆசிரியர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அண்மையில் மீளக்குடியேற அனுமதிக்கப்பட்ட பாடசாலையொன்றின் ஆசிரியர் 13, 14 வயதுடைய சிறுமிகளுடன் துஸ்பிரயோகத்தில் ஐந்தாம், ஆறாம் மாதங்களில் ஈடுபட்டதாகக் கூறிப் பதிவுசெய்த முறைப்பாட்டின் அடிப்படையில் ஆசிரியர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Related Posts