Ad Widget

யாழில் மது அருந்துபவர்களைக் குறிவைக்கும் பொலிஸார்!

யாழில் மதுபோதையில் வாகனம் செலுத்துவோரைக் கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பண்டினை காலத்தில் வாகன விபத்துக்களைத் தடுக்கும் வகையிலேயே குறித்த நடவடிக்கை இடம்பெற்று வருவதாகவும், இதன்போது மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்கள் மாத்திரமன்றி வீதிஒழுங்குகளை மீறுபவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் 24 மணிநேரமும் குறித்த சோதனை நடவடிக்கை இடம்பெறும் எனவும் இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் எனவும் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Posts