Ad Widget

யாழில், பொலிஸ் அணிவகுப்பு மரியாதை

இலங்கை பொலிஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டு 148 ஆவது ஆண்டை நினைவுகூரும் வகையில் யாழ். பொலிஸ் தலைமையகத்தில் பொலிஸ் அணிவகுப்பு மரியாதை இன்று புதன்கிழமை (03) இடம்பெற்றது.

d(29)

இதன்போது, பொலிஸ் சேவையில் உயிரிழந்தவர்கள் நினைவு கூறப்பட்டனர்.

இந்நிகழ்வில், யாழ். மாவட்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் றொஹான் டயஸ், யாழ்ப்பாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யு ஐ.விமலசேன, யாழ். மாநகர ஆணையாளர் செல்லத்துரை பிரணவநாதன், மதகுருமார் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Related Posts