Ad Widget

யாழில் படகு கவிழ்ந்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு!

யாழ்.பண்ணை குறுசடி தீவில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்ததுடன், சிறுமி உட்பட ஏனைய 5 பெண்களும் உயிருடன் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்.பண்ணை குறுசடி தீவில் அமைந்துள்ள அந்தோனியார் ஆலயத்திற்கு நேற்று (வியாழக்கிழமை) சென்ற வேளையிலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

இந்த அனர்த்தத்தில் சிக்குண்டு ரி. குயின்சன் (வயது 28) என்ற குடும்பஸ்தர் பலியாகியுள்ளார். சிறுமி உட்பட ஏனைய 5 பெண்களும் மீனவர்களினால் மீட்கப்பட்டு, யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஊயிரிழந்த குடும்பஸ்தரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

Related Posts