Ad Widget

யாழில் நாளொன்றுக்கு ஒரு கோடி ரூபா பெறுமதியான மதுபானம் விற்பனை

beer-wineயாழ்ப்பாணத்தில் நாளொன்றுக்கு சராசரியாக ஒரு கோடி ரூபாவிற்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

புதிய புள்ளி விபரத் தகவல்களின் அடிப்படையில் இந்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

30 ஆண்டுகளுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் மதுபானம் பயன்பாடு காணப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இன்று அதிகமான ஹோட்டல்களில் மதுபானம் விற்பனை செய்யப்படுகின்றது. உயர்கல்வி பயிலும் பாடசாலை மாணவர்களும் இவ்வாறு மதுபானம் அருந்துவதாகக் குறிப்பிடப்படுகிறது.

மாணவர் ஒருவர் தண்ணீர் போத்தலில் பியர் கொண்டு சென்றதாக பாடசாலை ஆசிரியர் ஒருவர் குறிப்பிட்டதாக லங்காதீப பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

மதுபானம் காரணமாக பிரதேசத்தில் வன்முறைச் சம்பங்கள் உயர்வடைந்துள்ளன.

Related Posts