Ad Widget

யாழில் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக போராட்டம்!

தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பள உயர்வு கோரிக்கைக்கு ஆதரவாகவும் அதை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தியும் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் இன்று காலை இடம்பெற்றது.

சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் யாழ்.மத்திய பஸ் நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற இந்த போராட்டத்தில் அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் சமூக அமைப்புக்களை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தோட்டத் தொழிலாளர்களின் விடயத்தில் முதலாளிகளின் பக்கம் அல்லாமல் தொழிலாளிகளின் சார்பில் சிந்தித்து அரசாங்கம் உடனடியாக நடவடிக்கையை எடுக்கவேண்டும் என்று இப்போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தவறும் பட்சத்தில் இதேபோல் தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆதரவாக வட பகுதி முழுவதும் பாரிய போராட்டங்களை தாம் முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

இப்போராட்டத்திற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி நவ சமாஜ கட்சிய ஆகியனவும் ஆதரவை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts