Ad Widget

யாழில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர் மீது தாக்குதல்

நீர்வேலி பகுதியில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார கூட்டத்தை ஒழுங்கமைத்த நீர்வேலி பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் இனந்தெரியாத நபர்களின் தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.

நீர்வேலி பகுதியை சேர்ந்த நிஷாங்கன்(வயது26) என்ற இளைஞர் நேற்றய தினம் நீர்வேலி பகுதியில் தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கான பிரச்சார கூட்டம் ஒன்றை ஒழுங்கமைத்திருந்த நிலையில் கூட்டம் நிறைவடைந்த பின்னர் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது கோப்பாய் இராச வீதியில் வைத்து குறித்த தாக்குதல் சம்மவம் நடத்தப்பட்டுள்ளது.

சம்பவத்தில் 6 இனந்தெரியாத நபர்கள் ஈடுபட்டதாக தெரிவுக்கப்படுகின்றது. இந்நிலையில் படுகாயமடைந்தவர் தற்போது யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Posts