Ad Widget

யாழில் டெங்கு தாக்கம்; நேற்றும் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

யாழ். போதனா வைத்தியசாலையில் ஒருவர் நேற்று டெங்கு நோய்த்தொற்றிற்கு இலக்காகிய நிலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் திருநெல்வேலிப் பகுதியில் இருந்தே இந்த நோயாளி அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை நேற்று முன்தினம் நால்வர் இவ்வாறு டெங்கு நோய்த்தொற்றுக்கு இலக்காகி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இதேவேளை இந்த மாதத்தில் டெங்கு நோய்த் தாக்கத்திற்கு இலக்காகி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது.

Related Posts