தேசிய ரீதியில் விவசாய வாரம் எதிர்வரும் ஒக்டோபர் 5 ஆம் திகதி முதல் ஒருவார காலம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
இதனைமுன்னிட்டு எதிர்வரும் 14 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் விசேட நிகழ்வுகள் நடைபெறவுள்ளது.
இதற்கான முன்னாயத்தமாக மாகாணங்களின் விவசாய அமைச்சர்கள், செயலளர்கள் மற்றும் மாகாணப் பணிப்பாளர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இதில் முக்கிய விடயங்கள் ஜனாதிபதியால் ஆராயப்பட்டது. இதனைத் தொடர்ந்து
வடக்கு விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன் ஜனாதிபதியை நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.