Ad Widget

யாழில் சுற்றுவளைப்புத் தேடுதல்களில் இதுவரையில் 11 பேர் கைது!

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட சுற்றுவளைப்புத் தேடுதல்களின் போது, இதுவரையில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடக்கு மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபர் ரொஷான் பெர்னாண்டோ இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்பட்ட 4 உந்துருளிகளும் மீட்கப்பட்டுள்ளன.

கைதானவர்கள், யாழ்ப்பாணம், மானிப்பாய், சுண்ணாகம் போன்ற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

தொடர்ந்து சுற்றிவளைப்புகள் மற்றும் புலனாய்வு நடவடிக்கைகளின் ஊடாக வன்முறைகள் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts