Ad Widget

யாழில் சர்வதேச புகைப்படக் கண்காட்சி

photographers-wanted2தேசிய நிழற்பட கண்காட்சி அலுவலகம் எதிர்வரும் 22,23 தினங்களில் யாழில் நடத்தவுள்ள 16 ஆவது சர்வதேச புகைப்படக் கண்காட்சியில் 27 நாடுகளைச் சேர்ந்த 108 பேரின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தவுள்ளதாக வடமாகாண ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன் தெரிவித்தார்.

வடமாகாண ஆளுநர் செயலகத்தின் ஏற்பாட்டில் யாழ்.பொது நூலகத்தில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தனர்.

இதன்படி, யாழ்ப்பாணம் இந்து கல்லூரியின் குமாரசுவாமி மண்டபத்தில் இக்கண்காட்சி நடைபெறவுள்ளது.

இக்கண்காட்சியில், யாழ்.மாவட்டத்தின் பாடசாலை மாணவர்கள், புகைப்பட கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் தங்களால் எடுக்கப்பட்ட புகைப்படங்களைக் காட்சிப்படுத்த முடியுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்

Related Posts