Ad Widget

யாழில் கொரோனா நோய் தொற்று காரணமாக ஒருவர் உயிரிழப்பு!

கொரோனா நோய் தொற்று காரணமாக யாழ்ப்பாணம் கல்வியங்காட்டு பகுதியை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

கல்வியங்காடு , வீரபத்திரர் கோவிலடியை சேர்ந்த 77 வயதான முதியவரே உயிரிழந்துள்ளார்.

யாழ்.போதனா வைத்திய சாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த சடலத்தை சுகாதார விதிமுறைகளின் கீழ் பின் தகனம் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Related Posts