யுத்த இழப்பீடுகளை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முன்னிலை சோசலிச கட்சியினர் யாழில் கையெழுத்துப் பெறும் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.
யாழ். பஸ் நிலையத்தின் முன்பாக இன்று திங்கட்கிழமை காலை 10.30 அளவில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, இராணுவ முகாம்களை மட்டுப்படுத்து, மக்களின் குடியிருப்பு பகுதிகளில் இருந்து இராணுவத்தினை வெளியேற்று, அபகரித்த காணிகளை திருப்பிக்கொடு, போன்ற கோரிக்கைகளை முன்வைத்து பொது மக்களிடம் கையெழுத்துப் பெற்றனர்.
பெரும் திரளான மக்கள் இதில் தமது கையெழுத்துக்களை இட்டு ஆதரவு வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.