யாழ்ப்பாணம், சாட்டி கடற்கரையில் பெண்ணொருவரின் சடலமொன்று இன்று செவ்வாய்க்கிழமை (16) அதிகாலை கரையொதுங்கியுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.
35 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரின் சடலமே இவ்வாறு கரையொதுங்கியுள்ளது. இச்சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்று பொலிஸார் கூறினர்.
அத்துடன், பெண்களின் துவிச்சக்கர வண்டியொன்றும் கடற்கரையிலிருந்து மீட்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.