Ad Widget

யாழில் ஐக்கிய நாடுகளின் விசேட குழுவினர்!- காணாமல் போனோரின் உறவுகள் ஆர்ப்பாட்டம்

ஐக்கிய நாடுகளின் விசேட குழுவினர் இன்று வியாழக்கிழமை காலை யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் கோவில் வீதி நல்லூரில் அமைந்துள்ள ஐ.நா அலுவலகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உரிமைகளுக்கான அமைப்பு மற்றும் உறவினர்களுடன் அவர்கள் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.

யுத்த காலத்திலும், அதற்குப் பின்னரும் யாழில் காணாமல் போனவர்களினதும், கடத்தப்பட்டவர்களினதும் உறவினர்களை குறித்த குழுவினர் சந்தித்து முறைப்பாடுகளைப் பெற்று வருகின்றனர்.

ஐ.நா அலுவலகத்துக்கு வெளியே கடத்தப்பட்ட மற்றும் காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் கண்ணீருடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Posts