19 வயது இளைஞரை காணவில்லை என முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதா யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்.புங்கன்குளம் பகுதியைச் சேர்ந்த நாகேந்திரன் தனஞ்சயன் (வயது 19) என்ற இளைஞரே காணாமல் போயுள்ளார்.
கடந்த 28 அம் திகதி இரவு 8 மணியளவில் யாழ். நகரப்பகுதிக்கு போய் வருவதாக தாயாரிடம் கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார்.
எனினும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை என கூறி தாயார் யாழ். பொலிஸ் நிலையத்தில் நேற்று வியாழக்கிழமை மாலை முறைப்பாடு பதிவு செய்துள்ளார்