Ad Widget

யாழில் இராணுவத்தினர் இரத்த தானம்

இலங்கையின் 66ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ். மாவட்டத்தின் 513ஆவது படைப் பிரிவினைச் சேர்ந்த படையினரால் யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் இணுவில் வைத்தியசாலைகளில் இரத்ததானம் வழங்கப்பட்டன.

army-blood

நேற்று (04) நடைபெற்ற இந்த இரத்த தான நிகழ்வில் 513ஆவது படைப்பிரிவினைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட படையினர் பங்கேற்றனர்.

இணுவில் வைத்தியசாலைக்கு 513 படைப்பிரிவு உடுவில் பிரதேச படையினரால் 5ஆவது தடவையாக இரத்த தானம் வழங்கப்பட்டு வருவதாக 513ஆவது படைப் பிரிவின் தலைவர் பிரிகேடியர் எஸ்.பெரெரா தெரிவித்தார்.

இதேவேளை, இணுவில் வைத்தியசாலை வளாகத்தை சிரமதானம் செய்யும் பணியொன்றும் நேற்று இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டதுடன் கேணல் சரத் அமரசிங்க, இந்த சிரமதானத்துக்கு தலைமை தாங்கினார்.

army-2

இந்த நிகழ்வுகளில் தென்னிந்திய திருச்சபையின் போதகர் ரி.எச்.வசந்தகுமார், லெப்டினன் கேணல் ஜயசேகர, இராணுவத்தினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Posts