Ad Widget

யாழில் இரு சடலங்கள் மீட்பு!

யாழ்.நகர் மற்றும் திருநெல்வேலிப் பகுதிகளிலிருந்து இரு சடலங்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. திருநெல்வேலி கேணியடி வைரவர் கோயிலுக்கு அருகில் உள்ள வீடொன்றில் இருந்து எரிந்த நிலையில் மூதாட்டி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

தனித்து வசித்து வரும் இவருக்கு இன்று சனிக்கிழமை காலை உணவு கொடுப்பதற்காக அவரது மருமகன் அங்கு சென்ற போது வீட்டில் எரிந்த நிலையில் மூதாட்டியின் சடலம் காணப்பட்டுள்ளது.

மனநிலை பாதிக்கப்பட்டிருந்த இவர் மண்எண்ணெய் ஊற்றி தன்னைத்தானே எரித்துக்கொண்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.

கோப்பாய் பொலிஸார் சடலத்தை மீட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

இதேவேளை – யாழ்.நகர் கொட்டடிப் பகுதியில் இருந்து இன்று சனிக்கிழமை காலை ஆணொருவரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது. கொட்டடிப் பகுதியிலுள்ள வாய்க்கால் ஒன்றுக்கு அருகில் இருந்தே இவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இவர் பயணித்த சைக்கிளும் வாய்க்காலுக்குள் வீழ்ந்து கிடந்தது. கொட்டடியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான பூராசா கஜேந்திரன் (வயது 37) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். இவரது சடலம் யாழ். பொலிஸாரால் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Related Posts