Ad Widget

யாழ் – கொழும்பு பஸ் மீது கல்வீச்சு: நால்வர் காயம்

யாழிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற சொகுசு பஸ் மீது முகாமாலையில் வைத்து மேற்கொள்ளப்பட்ட கல்வீச்சு தாக்குதலில் நால்வர் காயமடைந்துள்ளாதாக பளைப் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை(12) இரவு இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் பஸ்ஸில் பயணித்த, அருட்சகோதரி ஜெலான்டினா (வயது 50) என்பவர் படுகாயமடைந்து அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் மூவர் காயமடைந்து பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

இனந்தெரியாத நபர் ஒருவரே பஸ்ஸுக்கு கல் எறிந்ததாகவும் அந்நபரை துரத்திச் சென்றபோது அவர், பற்றைக்காட்டிற்கு ஓடிவிட்டதாகவும் பஸ்ஸில் பயணித்த பயணிகள் தெரிவித்துள்ளனர். அப்பகுதியில் மிதிவெடி அபாயம் காணப்பட்டமையால் மேற்கொண்டு குறித்த நபரைத் துரத்தவில்லையென பயணிகள் கூறியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பளை பொலிஸார் தெரிவித்தனர்.

Related Posts