மோட்டார் சைக்கிள் தீப்பற்றி எரிந்ததில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.சோனப்பு கப்பூது வீதியில் நேற்று காலை இடம்பெற்ற இச் சம்பவத்தில் கரவெட்டி மத்தொனியைச் சேர்ந்த குமாரசாமி –நிரோஜன் (வயது 25) என்பவரே தீக்காயத்துக்குள்ளாகியுள்ளார்.
மோட்டார் சைக்கிள் முற்றாக எரிந்ததுடன் தலைக்கவசமமும் எரிந்த நிலையில் சம்பவ இடத்தில் காணப்படுகின்றது.
படுகாயமடைந்த நபர் மந்திகை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிக்சைகளுக்காக யாழ் போதனா வைத்திய சாலைக்கு அனுப்பிவைக்கப் பட்டுள்ளார்.
இது விபத்தா ?? அல்லது தற்கொலை முயற்சியா?? அல்லது கொலை முயற்சியா என்பது பற்றி இதுவரையில் எதுவித தகவலும் கிடைக்கவில்லை.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த நெல்லியடிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.