Ad Widget

மோடியை விரைவில் சந்திக்க எதிர்பார்த்துள்ளதாக இரா.சம்பந்தன் தெரிவிப்பு!

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை விரைவில் சந்திக்க எதிர்பார்த்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு கிழக்கில் தமிழ்த் தேசிய பரப்பில் இயங்குகின்ற கட்சிகள் இணைந்து இந்தியப் பிரதமருக்கான கடிதம் ஒன்றை, இந்திய உயர்ஸ்தானிகரிடம் கையளித்தன.

இந்தநிலையில் இதுகுறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடியை விரைவில் சந்தித்து தெளிவுபடுத்தவுள்ளதாக இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

Related Posts