Ad Widget

மோடியின் வருகை; வலி வடக்கில் பற்றைகள் துப்புரவு

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் யாழ்ப்பாண வருகையிட்டு வலிகாமம் வடக்கு மாவிட்டபுரம் – கீரிமலை வீதியின் இரு மருங்கிலும் உள்ள பற்றைகள் வெட்டி அகற்றப்படுவதுடன், கீரிமலையில் இருந்து சேந்தான்குளம் செல்லும் வீதியில் சில பகுதி கற்கள் போடப்பட்டு துப்பரவு செய்யப்படுகின்றன.

இந்தியப் பிரதமர் 14ஆம் திகதி கீரிமலைக்கு விஜயம் மேற்கொண்டு, அங்கு இந்திய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட வீடு ஒன்றை திறந்து வைக்கின்றார்.

இதனால், இப்பகுதியில் துப்பரவு பணிகள் இராணுவத்தினரின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Related Posts